அரசியல்
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வல்லம் அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா.
தென்காசி ஜனவரி 8 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள அன்னை தெரேசா ஆர் சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலமாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் இப்பள்ளியானது வல்லம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகளை கல்விப்…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மேள தாளங்கள் முழங்க,பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், 80-வது வார்டு மாமன்ற…
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
பழனி, ஜனவரி : 08, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ_3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து. பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் சாலையில் உள்ள அமுதம் அங்காடி நியாய விலை கடை எண் 2ல் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில்…
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா திருமலாபுரத்தில் துவக்கி வைப்பு.
தென்காசி ஜனவரி 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்டதிருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பாக கரும்பு பச்சரிசி சர்க்கரை வேஷ்டி சேலை ரூபாய் 3000 அடங்கிய தொகுப்பை…
மதுரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.08) சென்னையில்தொடங்கிவைக்கிறார் இதனை தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள். 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு…
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள்இன்று (7.1.2026) திண்டுக்கல்மாவட்டம், வேலுநாச்சியார்வளாகத்தில்நடைபெற்றஅரசுவிழாவில், முடிவுற்றபணிகளைதிறந்துவைத்து, புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டி, பல்வேறுதுறைகளின்சார்பில்பயனாளிகளுக்குஅரசுநலத்திட்டஉதவிகளைவழங்கி, ஆற்றியஉரை.
திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே, திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, திரு. பெரியகருப்பன் அவர்களே, திரு. சக்கரபாணி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருமை சகோதரி ஜோதி மணி அவர்களே, திரு. சச்சிதானந்தம் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் அன்புக்குரிய தம்பி செந்தில்குமார் அவர்களே, திரு. காந்திராஜன் அவர்களே, வாரியத்தின் தலைவர் ரங்கநாதன் அவர்களே, மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களே, கூடுதல் தலைமைச் செயலாளர்…
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில்ரூ.1,594.90 கோடி செலவிலான 111 முடிவுற்ற திட்டப் பணிகளைதிறந்து வைத்து, 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,2,62,864 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 337 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,62,864 பயனாளிகளுக்கு 1082 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகம் உங்கள் கையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று(05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 234 மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு…
சென்னை, ஜனவரி 03: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், இன்று இரவு முகநூல் (Facebook) நேரலை மூலமாக கட்சியின் 234 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 144 மாவட்ட செயலாளர்களில் 48 பேரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் 90 தொகுதி மாவட்ட செயலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 138 புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28 மாவட்டங்களுக்கான நிர்வாக அமைப்புகள் (பதவிகள் மற்றும் பொறுப்பாளர்கள்)…
