கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை, சக்தி சுகர்ஸ் அருகில், வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமினை,மாண்புமிகு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மற்றும் மண்டலத்தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பூங்கா இயக்குநர்/கால்நடை மருத்துவர் மரு.சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் முனியம்மாள், சுமா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
செய்தி : சம்பத்குமார் : கோவை
