அக் 08 கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர. அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது
அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலுக்கு கொடி கொண்டு வரப்பட்டது
நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் செய்யது முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார், தலைவர் அன்வர் ஹுசைன் கொடி ஏற்றினார்
நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது
நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள், இமாம்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
அன்ஷத் மாலிக் தக்கலை சிறப்பு நிருபர்.
