ஆன்மிகம்
மதுரை புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் தமிழக வெற்றி கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த சந்தனக்கூடு திருவிழாவில் அப்பகுதி உள்ள பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டார்கள் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த சந்தனக்கூடு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தலைமை U.பாஷில் பாட்ஷா தர்கா மேனேஜிங் டிரஷ்டி, விஜய்…
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.
திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…
பழனியில் சிவ சேனா ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறைக்கு வேண்டுகோள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவசேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள், விநாயகர் சிலை தயாரிப்பது மற்றும் வேல் யாத்திரை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிவசேனா பொறுப்பாளர்கள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் கொண்டாடப்படுவதைப் போல, தமிழகத்திலும் கணபதி விழா எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாகக் கொண்டாடும் வகையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி காவல்துறை விதிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தாலும், அது…
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில்…
பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!
பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கம் மட்டும் பக்தர்களின் கூட்ட நெரிசலால் பெண்கள் சிறுமிகள் மயக்கம்-கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையிலும் ஆங்காங்கே சிறுமிகள் பெண்கள் மயக்கமடைந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக சன்னதி தெரு, கீழரத மேல ரத வீதிகளில்…
பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!
குள்ளவீரன் பட்டி கிராம மக்கள் தீர்த்தக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்… பழனி, ஏப்ரல் 02:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தலைமுறை கடந்த பக்திஇத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குள்ளவீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 மனை…
பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்…
பழனி, ஏப். 02:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானைத் தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனிக்கு வருகை தருகின்றனர். பிரம்மாண்ட அன்னதானம்:பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் பசியாற்றும் நோக்கிலும், ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் பழனி கிரிவீதி பகுதியில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதயாத்திரையாக வந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூன்று வகையான சுவையான சாதங்கள் மற்றும்…
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…
கோவை மாவட்டம் கரும்பு கடை பகுதியில் ஈகைத் திருநாள் தொழுகை.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவைக் கிளை சார்பில் ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை இன்று காலை 7 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ஜனாப் PS. உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் தொழுகையை நடத்தி வைத்தார். உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனையையும் அவர் முன்னெடுத்தார்.நிகழ்வை அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைந்தார். இதில் ஆண்கள்-பெண்கள் என 15000 திற்கும்…
