Headlines

கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

கூட்டுறவுத்துறை தணிக்கை மென்பொருள் குறித்த பயிற்சி.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் கூட்டுறவாளர் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவு தணிக்கை துறையின் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், தணிக்கை துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் Cooperative Audit Management System (CAMS) தொடர்பான பயிற்சி வகுப்பானது இன்று 04.04.2025ல் நடைபெற்றது.

மேலும் 07.04.2025 முதல் தணிக்கை பணியானது CMAS மென்பொருள் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால் அனைத்து பணியாளர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சரக துணப்பதிவாளர் (பொறுப்பு) திரு. செ. கமல் சேட், கூட்டுறவு தணிக்கை அலுவலர் திரு. அ. ஜெகதிஸ்குமார், அலுவலக கண்காணிப்பாளர் (தணிக்கை) க. சுப்பிரமணியன், அலுவலக கண்காணிப்பாளர் (நிர்வாகம்) திரு. பெ. சரவணன்,நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிர மாவட்ட செய்தியாளர். அருள்தாஸ்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *