வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் லாரி பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் குடிப்பழக்கத்தை கைவிட்டால் திருமணம் செய்து வைக்கிறேன் என கூறியுள்ளனர். ஆனாலும் தினமும் குடித்துவிட்டு பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளர். இதில் மனமுடைந்த மணிகண்டன் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலின் பேரில் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.