Headlines

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்

ஆக 22, கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பகுதியில் ஆவணித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறத்து அய்யாவுக்கு பணி விடை நடைபெற்றது. அதன் பின்னர் கொடிப்பட்டம் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 11 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில், எட்டாம் நாள் கலிவேட்டையும் மற்றும் 11ஆம் நாள் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அய்யா பவனி வருதல் போன்ற நிகழ்வுகள் பக்திமிகு சூழலில் நடைபெறவுள்ளன.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *