Headlines

முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்…

முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்...

உடுமலை
அக்டோபர் 28.

உடுமலை அக்.28-உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன் ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

செயலாளர் நாயப் சுபேதார்நடராஜ் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலையில் வகித்தார்.

இதில் சிறப்புஅழைப்பாளராக கர்னல் நாகராஜ், சித்ராநாகராஜ், ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய சீருடை தேர்வு செய்தல் குறித்தும் அவர்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்குவது மற்றும் அவர்களுக்கான ஓய்வூதியம் குறித்த பணப் பயன்களை பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் சுபேதார் மேஜர் ஆனந்தன், சுபேதார் மோகன் , சுபேதார்சேரன், சுபேதார்மேஜர் மணி கண்டன்.ஹவில்தார் உலகநாதன், உட்பட முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *