மடத்துக்குளம், ஏப்ரல் 4:
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை முறையாக வழங்கினார்.
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு ;
வேட்புமனு தாக்கலின் போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி உடனிருந்தார்.
மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
ஆதரவாளர்கள் உற்சாகம் மனுத்தாக்கலை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகக் கூடியிருந்த கூட்டணி கட்சித் தொண்டர்கள், வேட்பாளருக்கு ஆதரவாக உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர், தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்திப் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார்.
