தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்ததால் ஒரு திருநங்கை உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பறும்புநகர் பகுதியில் சுமார் 15 திருநங்கைகள் ஒரே வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். இன்று காலையில் அந்த வீட்டில் ரத்தவெள்ளத்தில் ஒரு திருநங்கை இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடைபெற்ற பறும்பு நகர் பகுதி கடையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது என்பதால் கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடனடியாக இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆலங்குளம் அருகே உள்ள பறும்பு நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர்குளம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சைலு (எ) சைலஜா (வயது 34) என்பவரும் குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திருநங்கை சைலு (எ) சைலஜா அவரது ஆணுறுப்பை அவரே அறுத்த கொண்டதாகவும்
இதனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் சைலஜா துடித்துள்ளார். நேரம் ஆக ஆக ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சைலஜா அதே இடத்தில் துடிதுடித்து இறந்து.
விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில்
அதே வீட்டில் குடியிருந்து வரும் மகாலெட்சுமி (வயது 34) மதுமிதா (வயது 27) ஆகிய இரண்டு திருநங்கைகளும் சேர்ந்து சைலஜாவின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்தாக தெரிய வந்துள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கடையம் போலீசார் திருநங்கை சைலஜாவின் ஆணுறுப்பை அறுத்த திருநங்கைகள் மகாலட்சுமி மற்றும் மதுமிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.