திருநெல்வேலி,
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்[DGP] உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த ஊர்களில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று [ஜன.29] காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் 11 பேர் கலந்து கொண்டு, காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணியிடம், புகார் மனுக்களை அளித்தனர்.
” குறை தீர்க்கும் நாளில், பெறப்பட்டுள்ள இந்த புகார் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!” என காவல் ஆணையர், உறுதி அளித்தார்.
இக்கூட்டத்தில், காவல் துணை ஆணையர்கள் மேற்கு V.கீதா, கிழக்கு V.வினோத் சாந்தாராம், தலைமையிடம் S.விஜயகுமார் ஆகியோரும், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.