திருநெல்வேலி,அக்.29:-
“தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களால், நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று (அக்டோபர்.29) காலையில்,பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் தலைமையில், “பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்” நடைபெற்றது.
கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், மொத்தம் 21 மனுக்களை, பெற்றுக்கொண்டார்.
“பெறப்பட்டுள்ள மனுக்கள், முறையாக பரிசீலிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றின் மீதும், உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்!
” என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்து, மனுக்கள் மீதான விசாரணைகளை, துரிதமாக முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
