அக் 03 கன்னியாகுமரி
மணவாளகுறிச்சி பாலம் சந்திப்பில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதியதில் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆட்டோவில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவல் அறிந்ததும், மணவை குமரி டிரஸ்ட் சகோதரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிதாங்கோடு சிறப்பு நிருபர் பீர் முகமது
