மதுரையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் அவரின் புகைப்படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது கேப்டன் விஜயகாந்த் நினைவஞ்சலிக்கு தெற்கு தொகுதி பொறுப்பாளர் பூக்கடை ஆனந்த் முன்னிலை வைத்தார் .
இந்த நினைவஞ்சலியில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் . கேப்டன் விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.
