தாம்பரம் லட்சுமிபுரத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மனைவி பிரசாந்தி(30) என்பவர் திருவண்ணாமலையில் தனது உறவினர் சுப நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பும் போது திண்டிவனம் அடுத்த தனியார் டீ கடை அருகே தனது காரை நிறுத்தி டீ அருந்தி விட்டு செல்லும்போது தனது கையில் வைத்திருந்த கைப்பையை டீக்கடையிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதாகவும் அதில் 18 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவை இருந்ததாக கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து எண் -1 ல் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மாணிக்கவாசகர் மற்றும் தலைமை காவலர் திரு.வேல்முருகன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு டீ கடைக்கு சென்று தம்பதிகள் தவறவிட்ட பையை கண்டுபிடித்து மீட்டு அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரோசனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.தரனேஸ்வரி அவர்களின் முன்னிலையில் தம்பதிகள் தவறவிட்ட உடைமைகளை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தவறவிட்ட 18 சவரன் மற்றும் லேப்டாப்பை மீட்ட போலீசாருக்கு தம்பதிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
18 சவரன் நகை மற்றும் லேப்டாப் தவறவிட்ட பையை உடனடியாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
