Headlines

செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் மேற்படி ரவுடி மகேஷ் என்ற நாய் மகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபகாலமாக தென்காசி மாவட்டத்தில் அதிரடி காட்டி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் செங்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோரின் துரித நடவடிக்கையால் பொதுமக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர் செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S பாலமுருகன் மனிதநேயத்தோடுபொதுமக்களை அணுகுவதிலும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவரை உடனடி கைது செய்து தகுந்த தண்டனைகளை பெற்றுத் தருவதாலும் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *