Headlines

திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!

திருநெல்வேலி,டிச.16:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர் மு.அப்பாவு ஆசியுடன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முனைவர் ம.கிரகாம்பெல் வழிகாட்டுதலின்படி, ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி!” தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள், இடையன்குடி ஊராட்சி வாக்குச்சாவடி எண்கள் 264 மற்றும் 265 பகுதிகளில், இன்று (டிசம்பர். 16) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு, திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிகளில், 2026 சட்டமன்ற தேர்தலில், வாக்குச்சாவடிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து திராவிட மாடல் அரசின், நான்காண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறிடும் வகையில், சாதனைகள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், அனைவருக்கும் வழங்கப்பட்டன.

அப்புவிளை ஊராட்சி மன்றத் தலைவர் ஜேகர், கட்சி நிர்வாகிகள் ஜெபக்குமார், சாமுவேல் ராஜசிங், இம்மானுவேல்,சம்பத்ராஜ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சிகளில பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *