செப் 20 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையம் அருகே இன்று காலை பரபரப்பு விபத்து ஏற்பட்டது.
சாலையில் சென்றுகொண்டிருந்த டாறஸ் லாரியின் டயர் திடீரென வெடித்து சட்டென நின்றது. அந்த சமயம் பின்னால் வந்த கேரள அரசு பேருந்து லாரியை மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிதாங்கோடு சிறப்பு நிருபர் பீர் முகமது
