அரசியல்
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…
திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு: சமூக வலைதள பதிவுக்கு எதிராக காவல்துறையில் மனு.
பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புகார் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “Rexona Rex (@sonarx_official24)” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதுடன், பட்டியலின மக்களையும்…
“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”
இந்திய அரசியல் நிலைமை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டபடி, பாசிசத்திற்கெதிராக வலுவாக குரல் எழுப்பி வந்த தலைவர்கள் பலரும் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். இதனால், நாட்டின் அரசியல் திசை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பொதுத்தேர்தல்களிலும் மாநில தேர்தல்களிலும், ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த சக்திகள் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிகள், ஒரு குறிப்பிட்ட…
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல
‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…
மதுரை : 3 நாட்கள் முன்னாடி வரைக்கும் ஷூட்டிங்கு திடீர் வேட்பாளரா? அது எப்படி சுந்தர்.சி? ‘குஷ்புக்கே 10 வருஷமா சீட் கிடைக்கல’..!
‘‘உங்களிடம் சில கேள்விகள் கேட்டாகணும் மிஸ்டர் சுந்தர். நீங்க ஒரு சினிமா டைரக்டர். பரவாயில்லை வாங்க அரசியலுக்கு. ஆனா, எப்படி வந்தீங்க? மூன்று நாட்களுக்கு முன்னாடி வரையிலும் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு வேட்பாளர்னு அறிவிச்சதும் நீங்களே ஆச்சர்யப்பட்டீங்களா இல்லையா?* மூன்று நாள் முன்பு வரையிலும் மதுரை மக்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, இந்திய அரசியலுக்கோ, எந்த பிரச்னையும் பற்றி பேசாமல், நான் சிறந்த டைரக்டர்னு சொல்லிக்கிட்டு இருந்த நீங்க, யாரோ அறிவிச்சதும், துண்டைப் போட்டுக்கிட்டு எம்எல்ஏ ஆகப்போறேன்னு வந்துருவீங்களா?…
ஊர்க்குருவியும் உள்ளூர் பருந்தும்: ஒரு ‘விசில்’ ரகசியம்!
நம்ம ஊர் பெரிய ஆலமரத்துக் கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்தது உள்ளூர் பருந்து. அப்போது மூச்சிரைக்கப் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது ஊர்க்குருவி. ஊர்க்குருவி: அண்ணே… பருந்து அண்ணே… ஒரு சூடான ‘மேட்டர்’ கிடைச்சிருக்குண்ணே! அப்படியே ‘கிரிஸ்பி’யான ஒரு நியூஸ்! உள்ளூர் பருந்து: என்ன குருவி, இறக்கை எல்லாம் இவ்வளவு படபடக்குது? மேலிருந்து பார்த்த வரைக்கும் ஊர் அமைதியாகத்தானே இருக்கு. அங்க கீழே என்ன விசேஷம்? ஊர்க்குருவி: வெளியில பார்க்கத்தான் அண்ணே அமைதி, ஆனா உள்ளுக்குள் பெரிய…
நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு உற்சாக வரவேற்புகட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி ஆதரவாளர்கள் பங்கேற்பு.
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் அவர்களுக்கு 48வது வார்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக 48வது வார்டு வட்டக் கழக செயலாளர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் கட்சித் தொண்டர்களின் செயற்பாட்டை வெளிப்படுத்தியது. இந்த வரவேற்பு நிகழ்வில் வட்டக் கழக துணை செயலாளர் இப்ராஹிம், ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, முன்னாள் எம்.சி. ஹாஜி பாபு ஆகியோரும்…
பழனி மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு: ‘மோதிரம்’ சின்னத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு!
பழனி, ஏப். 15: பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கிராமங்களில் சுயேச்சை வேட்பாளர் ஆடலூர் ராமமூர்த்தி மேற்கொண்டு வரும் தீவிர தேர்தல் பிரச்சாரம், நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. வில்பட்டியில் எழுச்சிமிகு வரவேற்பு:பழனி அருகே உள்ள வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று ஆடலூர் ராமமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தேர்தல் சின்னமான ‘மோதிரம்’ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அவர், மலைக்கிராம மக்களின் அடிப்படைத்…
பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!
பழனி | [14.04.2026] பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அவற்றுக்கு உரிய அதிகாரிகளின் மூலம் தீர்வு காணவும் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் குரல் – தொகுதியின் தீர்வு! நமது தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளை பொதுமக்கள் தற்போது இந்தத் தளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் தொகுக்கப்பட்டு, ஊடகச் செய்திகளாக வெளியிடப்படும். மேலும், அவை…
அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு.
வடசேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி; கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வடசேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோபிபேரறாவாளன் தலைமையேற்றார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் குறித்து சுருக்கமாக பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….
