வாணியம்பாடி, பிப்.2- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் பொன்னேரி அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று பொன்னேரியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் என்பவர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மருத்துவர் சதீஷ் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
விபத்தை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் சதீஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.