Headlines

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் குரலும் பொருளும் தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற்றது.

குறளும் – பொருளும்தொடக்கவிழா….
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக “குறளும் பொருளும்” நிகழ்வு மாவட்ட மாநில நிகழ்வின் தொடக்கமாக இன்று சங்கராபுரம் வட்டம் புதுப்பாலப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமையாசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட முத்தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முருககுமார் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டசிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டச்செயலாளர் பழனிவேல், மாவட்டத்துணைத்தலைவர் காயத்ரி, மாவட்ட முத்தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தராசன், ஓவியர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாணவர்களுக்கு “குறளும் பொருளும்” போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது, முன்னதாக மாவட்ட அளவில் திருக்குறள் வினாடி-வினா நிகழ்வில் முதலிடம் பெற்ற தலைமையாசிரியர் வெங்கடேசன் அவர்களுக்கு விருது கேடயம், மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டப்பட்டார் நிகழ்வின் முடிவில் உதவி தலைமையாசிரியர் முருகையன் நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *