Headlines

உதகையில் – நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..

உதகையில் - நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது..

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நேற்று 21- 09- 20250 அன்று நபிகள் நாயகம் அவர்களின் 1500 வது உதயதின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதகையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதரசா மாணவர்களும் ஆலிம் பெருமக்களும் மற்றும் இசுலாமிய சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நபிகள் நாயகத்தின் பெருமையை போற்றும் வகையில் அவரின் புகழை மதரசா மாணவர்கள் எடுத்துறைதனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியான மீலாது விழா ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமானது காந்தல் சுன்னத் ஜமாத் ஜாமியா பள்ளிவாசலில் தொடங்கி முக்கோணம் , பிங்கர்போஸ்ட் , ரோகினி வழியாக மீண்டும் காந்தல் வந்தடைந்தது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *