அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது
கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை; புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் தரக்குறைவான கருத்துகள் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், 36 வயதுடைய பெண் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் அரசாங்கம் வழங்கும் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்காமல், அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி லாபம் அடைவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பு காவல்துறையில்…
