Headlines
மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?

மதுரை : நெல் பேட்டையில் உள்ள தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமா!?

நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் தனக்கு சொந்தமான வாகனத்தை தயிர் மார்கெட்டில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் விளக்கு தூண் காவல் துறை உதவியுடன்? அத்துமீறி வாகனத்தை இடையூறாக நிறுத்தி உள்ளார். நெல்பேட்டையில் பகுதியில் தயிர் மார்கெட் தனி நபருக்கு சொந்தமானதா ?அல்லது மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானதா..!?என பெண் வியாபாரிகள் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். மார்கெட்டில் இடையூறாக உள்ள வாகனம் அகற்ப்படுமா!?

Read More
தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.

தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.

கன்னியாகுமரி, ஏப் 10, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும்…

Read More
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.

கோவை, ஏப். 08:கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் நேற்று மாலை (06.03.2026) மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பகுதிச் செயலாளர் திரு. மதியழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், வார்டு வாரியாகப் பொறுப்பு…

Read More
நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில், ஏப். 8: நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக் கடன் நிறுவனத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மின்னணு சாதனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நிறுவனத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி (High tension wire) எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துள்ளது.அந்த அறுந்த கம்பியானது, நிறுவனக் கட்டிடத்திற்குள் செல்லும் மின்கம்பியின் மீது உரசியதில் கடுமையான மின்கசிவு ஏற்பட்டு…

Read More
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More
விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!

விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!

விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக முன்னாள் சபை செயலாளர் டி.டி.பிரவீன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய வழக்கொன்று குறித்த தகவல்கள் தற்போது தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருவனந்தபுரம் காரக்கோணம் டாக்டர்.சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 28 மாணவர்களின் பெற்றோர்களிடம் சுமார் ரூ.7.22 கோடி பணம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள்…

Read More
பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!

பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!

குள்ளவீரன் பட்டி கிராம மக்கள் தீர்த்தக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்… பழனி, ஏப்ரல் 02:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தலைமுறை கடந்த பக்திஇத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குள்ளவீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 மனை…

Read More
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!

பழனி | ஏப்ரல் 02: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு பிராமண சமாஜம் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமாஜத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தலைவர் ஹரிஹர முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆட்சிமுறைக்கு ஆதரவு “தமிழக…

Read More
பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி 'VISHWA'26' கோலாகலம்!

பழனி PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா: தமிழ்க் கலாச்சார முறைப்படி ‘VISHWA’26’ கோலாகலம்!

பழனி | மார்ச் 26, 2026 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள PSKL Lilliputs Montessori பள்ளியின் 7-ஆம் ஆண்டு விழா, “VISHWA’26 – தமிழ் கலாச்சாரம்” என்ற கருப்பொருளில் (Theme) தனியார் மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மங்களகரமான தொடக்கம்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரை மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்புஇவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏங்கள்ஸ்…

Read More
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More