நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உதகைக்கு வருகை தரவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை குறித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
