செப்6, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :
கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பல தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
