Headlines
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More
717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

பேருந்து நிறுத்தத்தில் போதையில் அநாகரிகமாக கிடக்கும் நபர்கள்; பெண்கள், மாணவிகள் அச்சம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாத முதல் வாரத்திற்குள் குறிப்பிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள்…

Read More
கண்காணிப்பில் புதிய கட்டம்: கன்னியாகுமரியில் KAAVAL AI கேமரா அமைப்பு தொடக்கம்

கண்காணிப்பில் புதிய கட்டம்: கன்னியாகுமரியில் KAAVAL AI கேமரா அமைப்பு தொடக்கம்.

போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System என்ற நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐபிஎஸ், செவ்வாய்க்கிழமை (09 ஜூன் 2026) காலை தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பு, சாலைப்…

Read More
காலத்தைப் பதிவு செய்த ‘வேர்களைத்தேடி’ மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலாக வெளியீடு

காலத்தைப் பதிவு செய்த ‘வேர்களைத்தேடி’ மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலாக வெளியீடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக மற்றும் கல்விசார் பணிகளில் ஈடுபட்டு வரும் மாலிக்தினார் பைத்துல்மாலின் தோற்றம் மற்றும் வளர்ச்சி வரலாற்றைப் பதிவு செய்யும் “வேர்களைத்தேடி – மாலிக்தினார் பைத்துல்மால் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளியீட்டு விழா, பைத்துல்மால் மாலிக்தினார் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. இப்ராஹிம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் ஆசிரியர் இப்ராஹிம் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். திருவை முஸ்லிம் ஆர்ட்ஸ் கல்லூரி தாளாளர் முகமது அலி தலைமை தாங்கி, நூலை…

Read More
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…

Read More
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.

மேல மணக்குடி மீனவர்களின் குடும்பங்களை சந்தித்தார் எம்எல்ஏ தளவாய்சுந்தரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களின் குடும்பத்தினரை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையை கேட்டறிந்த அவர், மீனவர்கள் திரும்பி வரும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். வாழ்வாதாரத்தை இழந்து சிரமங்களை எதிர்கொண்டு வரும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய…

Read More
இயந்திர விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இயந்திர விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.

நாகர்கோவில் அருகே மீன் வலை உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மீன் வலை உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழில்துறை விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக இந்த சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற தொழிலாளி, இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தபோது இயங்கிக் கொண்டிருந்த…

Read More
வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.

வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.

கழிவுநீர் வெளியேற்றம் குறித்து புகார்; மாநகராட்சி நடவடிக்கை. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சில கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, சில கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் பொதுச் சுகாதாரத்துக்கு…

Read More
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கம் மட்டும் பக்தர்களின் கூட்ட நெரிசலால் பெண்கள் சிறுமிகள் மயக்கம்-கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கம் மட்டும் பக்தர்களின் கூட்ட நெரிசலால் பெண்கள் சிறுமிகள் மயக்கம்-கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையிலும் ஆங்காங்கே சிறுமிகள் பெண்கள் மயக்கமடைந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக சன்னதி தெரு, கீழரத மேல ரத வீதிகளில்…

Read More
மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

75 கிராம் கஞ்சா பறிமுதல் – டி.எஸ்.பி. தனஜெயன் உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி வேட்டை. பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனஜெயன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின் பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பாய்வாளர் விஜய் மற்றும் போலீஸார் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார்…

Read More