திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…
