பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!
பழனி, ஜூலை 29: பழனி அருகே வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சினையாட்டைத் திருடிச் சென்று கொன்ற நபரை, ஆட்டின் உரிமையாளர் அவரது தம்பியுடன் சேர்ந்து துரத்திப் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலம்பட்டி அஞ்சல், வேப்பன்வலசு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (36). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 09.00 மணியளவில், வீட்டின்…
