நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்.
மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் கார்கள், தங்கம், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது…
