Headlines
கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?

கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?

வெள்ளமோடி, ஆக. 27: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில், மக்களின் உடல்நலனோடு விளையாடும் வகையில் எவ்வித முறையான லேபிளும், காலாவதி தேதியும் இன்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள பல பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை அல்லது FSSAI உரிம எண் என எந்தவொரு அடிப்படைத் தகவலும் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. சில டப்பாக்களில் மட்டும் பெயரளவுக்கு மார்க்கர் (Marker)…

Read More
பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பழனி, ஆக. 26: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணக்கன்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை தினங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கூவி கூவி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, ஒரு மது பாட்டிலுக்கு மூன்று மடங்கு வரை கூடுதல் விலை…

Read More
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்

கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.

திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…

Read More
இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி

இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப்…

Read More
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: "ஊர் விலக்கம் செல்லாது" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: “ஊர் விலக்கம் செல்லாது” – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் திருவிழா விவகாரத்தில், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழாவின் போது, அதே ஊரைச் சேர்ந்த பாலசிந்தன் என்பவரிடம் திருவிழா வரி வசூலிக்கப்படவில்லை என்றும், முறைப்படி…

Read More
பணம் இல்லை, செல்போனும் பறிபோனது... நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

பணம் இல்லை, செல்போனும் பறிபோனது… நடுக்கூடத்தில் கண்ணீருடன் நின்ற அசாம் இளைஞர்கள்! கைகொடுத்த குமரி மக்கள்!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாஹீன் அகமது, ஜுயல் அக்தர் ஆகிய இருவருக்கும் வயது வெறும் 20 தான். குடும்ப வறுமையைப் போக்கலாம் என்ற ஆசையில், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி வந்து, கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் உள்ள PPK என்ற ஒப்பந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செய்த வேலைக்கான சம்பளம் என எதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இரக்கமின்றி, அடிமைகளைப் போல அதிக நேரம் வேலை வாங்கி அந்த நிறுவனம் கொடுமைப்படுத்தியதாக…

Read More
பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!

பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!

பழனி | [14.04.2026] பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அவற்றுக்கு உரிய அதிகாரிகளின் மூலம் தீர்வு காணவும் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் குரல் – தொகுதியின் தீர்வு! நமது தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளை பொதுமக்கள் தற்போது இந்தத் தளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் தொகுக்கப்பட்டு, ஊடகச் செய்திகளாக வெளியிடப்படும். மேலும், அவை…

Read More
திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு - வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாலை அமைப்பு – வனத்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது பரபரப்பு புகார்!

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிச் சாய்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த வலாங்குளம் பகுதி நிலங்கள், ஊத்து வனச்சரகத்தின் கீழ் வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தங்களது நிலங்களுக்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாததால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,…

Read More
ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வில் ஜப்பானை சேர்ந்த 50 முருக பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு யாத்திரியை தொடங்கி, திரு ஆவினன்குடி முருகனை தரிசித்து பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை வேலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் இழுத்து மாரியம்மனுக்கு நடைபெறும் மாசி திருவிழாவில் தேர் இழுத்து தீச்சட்டி…

Read More
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!

அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!

#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…

Read More