நாகர்கோயில், நவ 26:-
நாகர்கோயில் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் கோட்டார் பாக்தாத் அவர்களின் மறைவிற்கு, மாநில கழக அணி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கழகத் தோழரும், நாகர்கோயில் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவருமான, கோட்டார் பகுதியைச் சேர்ந்த அன்புச் சகோதரர் பாக்தாத் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு மாநில கழக அணி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழக விடியல் செய்திகளுக்காக
குமரி மாவட்ட கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
