இதழ்கள்
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சந்தித்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைப்பை வலியுறுத்தி மரியாதை நிமித்த சந்திப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் IAS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். ஸ்டாலின், IPS ஆகியோரை தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்தச் சந்திப்புகளில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் மற்றும்…
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…
மார்ஷல் நேசமணிக்கு அரசு மரியாதை நினைவு தினத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினத்தையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச் சிலைக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் ஐஏஎஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி உள்ளிட்டோர்…
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.
மேல மணக்குடி மீனவர்களின் குடும்பங்களை சந்தித்தார் எம்எல்ஏ தளவாய்சுந்தரம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களின் குடும்பத்தினரை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையை கேட்டறிந்த அவர், மீனவர்கள் திரும்பி வரும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். வாழ்வாதாரத்தை இழந்து சிரமங்களை எதிர்கொண்டு வரும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய…
இயந்திர விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.
நாகர்கோவில் அருகே மீன் வலை உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மீன் வலை உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழில்துறை விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக இந்த சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற தொழிலாளி, இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்தபோது இயங்கிக் கொண்டிருந்த…
வடசேரி பேருந்து நிலையக் கடைகளுக்கு ₹1 லட்சம் அபராதம்.
கழிவுநீர் வெளியேற்றம் குறித்து புகார்; மாநகராட்சி நடவடிக்கை. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சில கடைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா பேருந்து நிலையத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அப்போது, சில கடைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் பொதுச் சுகாதாரத்துக்கு…
பொறுப்புணர்வின் உதாரணம்; சுற்றுலா பயணியிடம் செல்போன் ஒப்படைப்பு.
கன்னியாகுமரி, மே : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற சுற்றுலா பயணி தனது செல்போனை தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருந்த அந்த செல்போன் காணாமல் போனதால் அவர் கவலையடைந்திருந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணையின் மூலம் செல்போன் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர் பிரின்ஸிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. சுற்றுலா மையமாக விளங்கும் கன்னியாகுமரியில்…
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கம் மட்டும் பக்தர்களின் கூட்ட நெரிசலால் பெண்கள் சிறுமிகள் மயக்கம்-கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையிலும் ஆங்காங்கே சிறுமிகள் பெண்கள் மயக்கமடைந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக சன்னதி தெரு, கீழரத மேல ரத வீதிகளில்…
மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!
75 கிராம் கஞ்சா பறிமுதல் – டி.எஸ்.பி. தனஜெயன் உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி வேட்டை. பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனஜெயன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின் பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பாய்வாளர் விஜய் மற்றும் போலீஸார் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார்…
பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!
ரொக்கப் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு பழனி:மே:19 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரட்டாறு பாலம் அருகேயுள்ள தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் பணப் பந்தயத்துடன் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சிறப்பு…
