இதழ்கள்
பழனி அருகே தொப்பம்பட்டி அரசுப் பள்ளியில் திண்டுக்கல் புத்தகத் திருவிழா போட்டிகள்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!
பழனி : தொப்பம்பட்டி , செப்டம்பர் : 02, பழனி தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13-வது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கதை சொல்லல் மற்றும் ஓவியப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்விற்கு பழனி கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் வாழ்த்துகளுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உயர்திரு சண்முகநாதன், வட்டாரக்…
பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை!
பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரத்துடன் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களாக பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு அரசு அங்கீகார அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை உள்ளிட்ட உரிய அங்கீகாரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அரசுப் பேருந்து பஸ் பாஸ் வழங்குதல், அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க உரிய அனுமதி வழங்குதல்,…
மதுரையில் யானைக்கல் பகுதியில் உள்ள பழக்கடையில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்.
மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் 10 நாளில் 10 கொடூர கொலைகள் நடந்து உலக சாதனை படைத்துள்ளது. யானைகல் பகுதியில் பழக்கடைகள் பகல் மற்றும் இரவு பொழுதுகளில் இயங்கி வருகிறது. நள்ளிரவில் இரு தரப்பினர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொடூரமாக மோதிக்கொண்டனர் .இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பு காணப்பட்டது. ஏற்கனவே விளக்குத்துண் காவல் நிலையத்தில் பணிபுரியும் விஜயகுமார் ( SI ) குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று புகார் இருந்து வருகிறது…
டெங்கு அச்சத்தில் சிவகிரிபட்டி கிராமம்: தூர்வாரப்படாத சாக்கடைகளால் நோய் பரவும் அபாயம் – துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பழனி : ஆகஸ்ட் 31, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியில் சரிவர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி மக்களிடையே நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாலசமுத்திரம் மருத்துவ நகர், பாண்டியன் நகர், சிவகிரிபட்டி, தட்டான்குளம், சேரன் ஜீவா நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதைகள் நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், சுழற்சி முறையில் கொசுமருந்து அடிக்கப்படாததாலும், குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் விநியோகிக்கப்படுவதாலும் அப்பகுதியில்…
பழனி மதனீசா முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2001-2002 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ – மாணவிகள், 25 ஆண்டுகள் கழித்து தங்களது வெள்ளி விழா மறுசந்திப்பு நிகழ்ச்சியைப் பள்ளியில் உற்சாகமாகக் கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மதனீசா முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில், 2001 – 2002 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு (10th Batch) பயின்ற மாணவ – மாணவிகளின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா மறுசந்திப்பு (Silver Jubilee Alumni Reunion) பெருவிழா பள்ளி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ”காலங்கள் மாறினாலும்… நினைவுகள் மாறாதே!”:“நினைவுகள் நம் உறவு… மீண்டும் ஒரு சந்திப்பு!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், 25…
மதுரை புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் தமிழக வெற்றி கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த சந்தனக்கூடு திருவிழாவில் அப்பகுதி உள்ள பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டார்கள் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த சந்தனக்கூடு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தலைமை U.பாஷில் பாட்ஷா தர்கா மேனேஜிங் டிரஷ்டி, விஜய்…
மாணவர் விடுதிகளில் மதுபாட்டில்கள்? விசாரணை நடத்த விசிக கோரிக்கை
புத்தன்பங்களா சாலையில் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிகளை இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வலியுறுத்தல் நாகர்கோவில் புத்தன்பங்களா சாலையில் செயல்பட்டு வரும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் மதுபானம் அருந்தப்படுவதாகவும், மறுநாள் காலையில் விடுதி வளாகத்தில் காலி மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் பொருட்கள் கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
ஊதிய உயர்வு கோரி ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்த போராட்டம்; சேவைகள் பாதிப்பு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமித் கன்சல்டன்சி நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மருத்துவமனையின் சில அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பிற மாவட்டங்களில் இதேபோன்ற பணிகளில்…
ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: ஊதிய உயர்வு, விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள்
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள், ஊதிய உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும் என்பதுடன், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலாளரை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது என்பதும் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகளில் அடங்கும். ஏற்கனவே பாலியல் தொல்லை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர்…
பழனி அருகே பள்ளிவாசல் சேதத்தை பார்வையிட்டு விசிக சார்பில் ஒரு லட்சம் நிதி உதவி ஜமாத்தார்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பெரிய கலையமுத்தூரில் மஸ்ஜிது நூர் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிவாசல் வழியே தனியார் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் பட்டாசுகள் வெடித்த போது பட்டாசின் தீப்பொறி பள்ளிவாசல் மேற்கூரை மீது விழுந்து தீப்பற்றி எரிந்தன. தொடர்ந்து பள்ளிவாசல் மேற்கூரை மற்றும் மின்விசிறி இருக்கைகள் கேமரா உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர்த்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் ஜே.பி.சரவணன் தனது விசிக…
