கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை ஒருகிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது, அதில், மாவட்ட செயலாளர்கள்,*தொண்டாமுத்தூர் அ.ரவி – துரை.செந்தமிழ் செல்வன் – தளபதி முருகேசன், கோவை M. P,கணபதி ராஜ்குமார், கூட்டணி தலைவர்கள் மற்றும்,ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் *

கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பான கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டுக்கான G. S. T நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி வஞ்சித்துள்ளது.குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை அனைத்து தலைவர்களும்,கண்டித்து, பேசினார்கள்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்.
