கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் Center Footwear Training Institute மற்றும் இணைந்து வழங்கும் புதிய தளிர் அறக்கட்டளை மத்திய காலனி பயிற்சி நிலையம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் பயிற்சி 38 நாட்களுக்கான பயிற்சி இன்று பில்லூர் கிராமத்தில் உள்ள 35 பெண்களுக்கு இலவச பயிற்சி செகண்ட் பேட்ச் இன்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தலைமை ஏற்று நடத்திய புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அய்யாதுரை திருசங்கு வரவேற்புரை குமரேசன் முன்னிலை விமல் ஊராட்சி மன்ற தலைவர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களும் பயிற்சியாளர் கங்காதரன் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சிகளுக்கு பயிற்சி புத்தகங்கள் நோட்டு பேனா பென்சில் யூனிபார்ம் போன்ற உபகாரங்கள் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக பில்லூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியின் நன்றியுரை குறளரசன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த்
