மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார்.
அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது.
கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில்.
ஏதுமில்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்; மனமே பதறுகிறது; ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்தே கொலை செய்துவிட்டனர்.
அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும்; காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி.
ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
