Headlines

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வாணாபுரம் பகண்டை கூட்ரோடுல் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் மத்திய மோடி அரசின் கைகூலியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருபானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்பாராசு ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் ஆஇராதாகிருஷ்ணன், வட்டார செயலாளர் வேஅபிலாஷ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் அய்யாசாமி பன்னீர்செல்வம் வட்டார துணை தலைவர்கள் செல்வம் கோவிந்தன் வட்டார பொதுச் செயலாளர்கள் சக்கரவர்த்தி அரிகிருஷ்ணன் அச்சுதன் குப்புசாமி ஆறுமுகம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மரூர்புதூர் காசி முருகன் பழையசிறுவங்கூர் ஆறுமுகம் பெரியகொள்ளியூர் தேவராஜ் கடம்பூர் கோவிந்தன் அந்தியூர் கோபாலகிருஷ்ணன் பாக்கம் புதூர் கோவிந்தன், வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *