Headlines

விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை…

மதுவிலக்கு அமல் பிரிவு, மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கெங்காரம்பாளையம் சாதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள் திரு.குணசீலன், திரு.விஜயகுமார் மற்றும் முதல் நிலை காவலர் திரு.வினோத் ஆகியோர் பணியின் போது புதுச்சேரி மில்லி சாராயம் பாக்கெட்டுகள் கடத்தி வந்த எதிரிகளை கைது செய்ய உதவிய மூன்று காவலர்கள் மற்றும் தலைமை காவலர் திரு.சக்திவேல் பணியில் இருந்த போது 480 பாட்டில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் கடத்தி வந்த நபரை கைது செய்ய உதவிய காவலருக்கும், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர்கள் திரு சிவபிரகாசம் மற்றும் திரு.சிவசக்திமைந்தன் ஆகியோர் பணியின்போது புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 124 மதுபான பாட்டில்களை கைப்பற்றி எதிரி கைது செய்ய உதவிய இரு தலைமை காவலர்களுக்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர்கள் திரு.ராமச்சந்திரன், திரு.மணிபாலன், திரு.கார்த்திகேயன் ஆகியோர் பணியில் இருந்த போது புதுச்சேரி மதுபானங்கள் கடந்தி வந்த நபரை கைது செய்ய உதவிய மூவருக்கும் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர்கள் திரு.பசுபதி, திரு.புருஷோத்தமன் ஆகியோர் பணியின்போது 800 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்ய உதவிய தலைமை காவலர்களுக்கும் நெடுஞ்சாலை வந்து பிரிவு எண் 5 ல் பணிபுரியும் தலைமை காவலர்கள் திரு.அழகுவேல் மற்றும் திரு.ராமதாஸ் ஆகியோர் சிறப்பாக பணி செய்தமைக்காக இரு தலைமை காவலர்களுக்கும் மேற்கண்ட போலீசார் சிறப்பாக பணி செய்தமைக்காக இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்கள் நேரில் அழைத்து நற்சான்று வழங்கி பாராட்டினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *