Headlines

வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் கலீம் அஹமத்(37).இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை, கொத்துவால் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில்(முசப் லெதர் பினிஷர்ஸ்) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தோல்களை தொழிற்சாலை முதல் தளத்தில் வைக்க லிஃப்ட் மூலமாக எடுத்து சென்றுள்ளார். அப்போது லிஃப்ட் முதல் தளத்தை அடைவதற்கு முன்பு பழுதாகி கீழே விழுந்துள்ளது. இதில் கலீம் அஹமத் கீழே விழுந்து மயங்கினார். உடனடியாக
அவரை சக தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நகர போலீஸார் விரைந்து சென்று இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *