Headlines

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 179வது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்.

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 179வது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது பிறந்த நாள் தினம் இன்று (20.09.2025) குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு. தா. முத்துக்குமார் ஆகியோர் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் சர் பிரடரிக் நிக்கல்சன் இங்கிலாந்தில் 1846ம் ஆண்டு செப்டம்பர் 20ல் பிறந்த இவர் இந்திய சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் திரு. பெ. ரவிக்குமார், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர், பண்டகசாலை மேலாளர் திரு. ரவி, முன்னாள் மேலாளர் திரு. அந்தோணி, நிக்கல்சன் கூட்டுறவு பண்டக சாலையின் அனைத்து பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *