திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு அமைக்கப்பட்டு வரும் விழா மேடைகள் மற்றும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , திருப்பூர் மாநகராட்சியின் நான்காம் மண்டல தலைவரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் , முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். நிகழ்வில் கோட்டாட்சியர் குமார் உள்ளிட்ட துரை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் சாமிநாதன் விழா பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சென்றார்.
