நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு. குருசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாணவர்களின் முன்னிலையில் குருசாமி அவர்கள் ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தி, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நல்ல ஒழுக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து திறமையான மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்புடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த விழா அனைவருக்கும் ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தது.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.
