Headlines
கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

09 ஜூலை, நெல்லை நியூஸ் தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தம்; ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகளில் பொறியியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் முதல் உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோளாறின் தன்மை…

Read More
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More
717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் ஆலன்கோட்டையில் தொடரும் அவலம்? – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்!

பேருந்து நிறுத்தத்தில் போதையில் அநாகரிகமாக கிடக்கும் நபர்கள்; பெண்கள், மாணவிகள் அச்சம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 717 அரசு டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாத முதல் வாரத்திற்குள் குறிப்பிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள்…

Read More
மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

மதுரை டூ பழனி கஞ்சா நெட்வொர்க்? கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த 3 இளைஞர்கள் போலீஸ் ஆக்ஷனில் சிக்கினர்!

75 கிராம் கஞ்சா பறிமுதல் – டி.எஸ்.பி. தனஜெயன் உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி வேட்டை. பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனஜெயன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின் பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பாய்வாளர் விஜய் மற்றும் போலீஸார் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார்…

Read More
பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

பழனி அருகே தோட்டத்தில் ரகசிய சூதாட்டம்: தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் 7 பேர் கைது!

ரொக்கப் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு பழனி:மே:19 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரட்டாறு பாலம் அருகேயுள்ள தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் பணப் பந்தயத்துடன் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சிறப்பு…

Read More
முகில் சட்டக் கல்லூரி சேர்க்கை சர்ச்சை: 60 மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறி?

முகில் சட்டக் கல்லூரி சேர்க்கை சர்ச்சை: 60 மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறி?

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறிய சேர்க்கை குற்றச்சாட்டு; மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் முகில் சட்டக் கல்லூரியைச் சுற்றி உருவாகியுள்ள சேர்க்கை சர்ச்சை, 60க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முதல் ஆண்டு எல்.எல்.பி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உடனடி தலையீடு கோரியுள்ளனர். படந்தாலுமூடு பகுதியில் இயங்கும் இந்த சட்டக் கல்லூரியில்,…

Read More
திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: "ஊர் விலக்கம் செல்லாது" - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி கோவில் திருவிழா: “ஊர் விலக்கம் செல்லாது” – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் திருவிழா விவகாரத்தில், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: மேட்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழாவின் போது, அதே ஊரைச் சேர்ந்த பாலசிந்தன் என்பவரிடம் திருவிழா வரி வசூலிக்கப்படவில்லை என்றும், முறைப்படி…

Read More
“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”

“இந்திய அரசியலில் மாற்றம்: எதிர்ப்புச் சத்தங்கள் குறையும் போது எழும் கேள்விகள்”

இந்திய அரசியல் நிலைமை கடந்த சில ஆண்டுகளில் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டபடி, பாசிசத்திற்கெதிராக வலுவாக குரல் எழுப்பி வந்த தலைவர்கள் பலரும் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். இதனால், நாட்டின் அரசியல் திசை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பொதுத்தேர்தல்களிலும் மாநில தேர்தல்களிலும், ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த சக்திகள் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிகள், ஒரு குறிப்பிட்ட…

Read More
பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!

பொதுமக்கள் அறிவிப்பு : பழனி சட்டமன்ற தொகுதி குறைகளைத் தீர்க்க புதிய முயற்சி!

பழனி | [14.04.2026] பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், அவற்றுக்கு உரிய அதிகாரிகளின் மூலம் தீர்வு காணவும் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் குரல் – தொகுதியின் தீர்வு! நமது தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளை பொதுமக்கள் தற்போது இந்தத் தளம் வாயிலாகப் பதிவு செய்யலாம். நீங்கள் அளிக்கும் புகார்கள் தொகுக்கப்பட்டு, ஊடகச் செய்திகளாக வெளியிடப்படும். மேலும், அவை…

Read More
ஏப்ரல் 14, உலக குவாண்டம் தினம்.

ஏப்ரல் 14-உலக குவாண்டம் தினம்.

உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்களால் ‘உலக குவாண்டம் தினம்’ (World Quantum Day) கொண்டாடப்படுகிறது. அணுக்களுக்குள் இருக்கும் மிக நுண்ணிய துகள்களின் செயல்பாடுகளை விளக்கும் குவாண்டம் இயற்பியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இயற்கையின் அடிப்படை ரகசியங்களைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத் தொழில்நுட்பங்களான குவாண்டம் கம்ப்யூட்டிங், அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் மருத்துவக் கருவிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவாண்டம் மெக்கானிக்ஸில் மிக முக்கியமான மாறிலியான பிளாங்க் மாறிலியின்…

Read More