இந்தியா
மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.
திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாருக்கு சென்னை அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். பழனியில் மீண்டும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி.செந்தில்குமார் போட்டியிட மாட்டார், திண்டுக்கல்லில் போட்டியிடுவார் என்றும் பழனியில் வேலுமணி போட்டியிடுவார் என்று பழனி அரசியலில் உலவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நிகழ்வு.
ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை, பழனியில் புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பானை சேர்ந்த முருக பக்தர்களின் வேல் தீர்த்த யாத்திரை நடைபெற்றது. முன்னதாக இந்நிகழ்வில் ஜப்பானை சேர்ந்த 50 முருக பக்தர்கள் புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து பால்குடம் ஏந்தியவாறு யாத்திரியை தொடங்கி, திரு ஆவினன்குடி முருகனை தரிசித்து பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை வேலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் இழுத்து மாரியம்மனுக்கு நடைபெறும் மாசி திருவிழாவில் தேர் இழுத்து தீச்சட்டி…
அரசு சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்யும் த.வெ.க.!
#பழனி சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக கட்சியினருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் பெருநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் த.வெ.கவினர் விசில் சின்னம் வரைந்துள்ளனர். அரசு சுவற்றில் சுவர் விளம்பரம் செய்யாதீர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் நமது சின்னம் விசில் என்ற முத்திரையை அச்சிட்டு விதிமுறைகளை த.வெ.கவினர் மீறியதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக பழனி…
அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கை!…
தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று. 18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்.. கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா. கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது. ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக…
பழனி கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நவீன தொழில் நுட்ப பயிற்சி.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டம் சார்பில் பழனி ஒன்றியத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் நவீன தொழில் நுட்ப பயிற்சி நெய்காரபட்டி கால்நடை மருந்தகத்தில் இன்று 18-2-26 அன்று உதவி இயக்குனர் கால் நடை பராமரிப்பு துறை பழனி கோட்டம் தலைமையில் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் மரு.கார்த்திகேயன்,மரு.செந்தில் குமார் மரு.கௌசல்யா,மரு நந்த குமார் கலந்து கொண்டு கால்நடை களுக்கு தொழில் நுட்ப…
நாகர்கோவில் அருகே மனநிலை பாதித்த யாசகர் மீட்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் யாசகம் செய்து கொண்டு இருந்த ஒருவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் ‘நிமிர்’ மீட்புக் குழுவினர் ஒன்றிணைவோம் அறக்கட்டளை, நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் இணைந்து மீட்டனர். சில ஆண்டுகளாக நாகர்கோவில் நகரில் சுற்றித் திரிந்து யாசகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இவர் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘நிமிர்’…
மனநலம் பாதித்த யாசகர் மீட்பு… ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு…
கன்னியாகுமரி, பிப் : 14கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும்…
70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்..மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள KTL சித்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியனருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. 70 வயது பூர்த்தியான தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருடம்தோறும் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விழாவானது தொடர்ந்து நடத்தப்பட்டது வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி…
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு… விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா (VSM) பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு கேடட்களின் (64வது பிரீமியர்ஸ்) பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி 28.01.2026 அன்று பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் (மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கம்) சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். இதில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தாங்கள் பெற்ற 7…
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…
