இந்தியா
அடல் பிஹாரி வாஜ்பாய் நூற்றாண்டு விழாவையொட்டிஅங்கன்வாடி குழந்தைகளுக்கான விளையாட்டு & கலைநிகழ்ச்சி – பரிசுகள் வழங்கல்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள பூச்சாத்தம் குளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறநெறி வளர்ச்சி, ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற சிறுவர்–சிறுமிய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..
இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
மதுரை, எஸ்.எஸ் காலனியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அல்-நூர் பார்வையற்றோர் மதரசா மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனர் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் கலந்து கொண்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவும் வழங்கினார். அறக்கட்டளை பயனாளர் நன்றி கூறினார். மேலும் நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்….
திண்டுக்கல் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் பாலின சமத்துவம் குறித்த ஓவியத்தினை வரைந்து நத்தம் ரோடு தனியார் கல்லூரியில் உலக சாதனை
கல்லூரி மாணவ மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 15 நிமிடத்தில் கலர் அட்டையில் பென்சில்கள் கொண்டு பாலின சமத்துவம் குறித்த லோகோவை ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்தனர். தமிழகத்தில் இதுவரை பாலின சமத்துவம் குறித்த உலக சாதனை நிகழ்ச்சி 15 நிமிடத்தில் இதுவரை யாரும் செய்திடாத நிலையில் 250 மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி பாலின சமத்துவம் குறித்த லோகோ வரைந்து சாதனை படைத்தது இதுவே முதன்முறை குறிப்பிட்டு வேர்ல்ட் ஒன்டேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்…
தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.
பிகாா் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்தைப்போல, தமிழகத்தில் அக்கட்சி இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாநில அரசின் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் இணைந்துதான் பணியாற்றி வருகின்றனா். ஆகையால், இதில் எந்தத் தவறும், குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக்…
திருநெல்வேலியில், காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தீபாவளி தள்ளுபடி கதர் விற்பனையை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
திருநெல்வேலி, அக், 2:- திருநெல்வேலி பாளையங்கோட்டை, ஆயுதப்படை காவல் பிரிவு எதிரே அமைந்துள்ள கதர் அங்காடியில், “தேசப்பிதா” அண்ணல் மகாத்மா காந்தியடிகளின், 157- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, இன்று (அக்டோபர். 2) காலையில், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர், “தீபாவளி” கதர் தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,…
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் வி.ஏ.ஓ. கைது!
பட்டா மாறுதலுக்காக 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும்-களவுமாக பிடிபட்டார்! திருநெல்வேலி, செப்.23:- நிலம் பட்டா மாறுதலுக்காக, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி (V.A.O) கைது செய்யப்பட்டார். அது பற்றிய விபரம் வருமாறு:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி விஜயா. பாஸ்கரின் தந்தை அய்யங்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தை, தன்னுடைய கணவர் பாஸ்கர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, விஜயா விண்ணப்பித்து…
நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்.
நாகர்கோவில், ஆகஸ்ட் 20:இன்று (20.08.2025) காலை சுமார் 7.30 மணி முதல் 7.40 மணிக்குள், நாகர்கோவில் மாநகரம் வெட்டூர்நிமடம் – பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் நபர் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபரின் பின்னுத் தலைவர் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டதோடு, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108…
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்!
காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். எட்டினால் குடிமியை பிடிஇல்லையேல் காலைப்பிடிஇது அவாள் தத்துவம்.! அந்த அடிப்படையில் தற்போது லட்டுக்கு யாகம் செய்து புனித நீர் தெளிக்கிறார்கள்.வேத காலத்தில்…
