Headlines

வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.

வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.

3 பேர் படுகாயம் அடைந்துஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட மணல் மாஃபியா கும்பல்.

வாணியம்பாடி,ஜூன்.16- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன இளையநகரம் பகுதியில் வசித்து வரும் பாப்பம்மாள் (75), அவரது மகன்கள் சீனிவாசன் (45), ஜெயவேல் (43). இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சின்ன இளைய நகரம் கானாற்று கரையோரம் உள்ள தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கானாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை கண்டும் காணாமலும் இருந்த இவர்கள் தற்போது கானாற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று அற்றின் இருபுற கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூர்வாரப்பட்ட கரையில் பக்கவாட்டுகளில் பள்ளம் தோண்டி மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும், கரையில் பள்ளம் போட்டு மணல் எடுப்பதால் மழைக்காலங்களில் மழை வெள்ளம் ஏற்படும் போது கரை சரிந்து போக்குவரத்து வழி துண்டிக்கப்படும் என்பதால் பாப்பம்மாள் மணல் கொள்ளையர்களிடம் மணல் திருட்டு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததால் மணல் கொள்ளையர்களுக்கும் பாப்பம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கரையில் பள்ளம் போட்டு மணல் திருடிக் கொண்டிருந்த நேரத்தில் பாப்பம்மாள் இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் பாப்பம்மாள் மற்றும் அவரது இளைய மகன் ஜெயக்குமார் ஆகியோரை கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த பாப்பம்மாள் மற்றும் அவரது மகன் ஜெயக்குமார்
வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். தகவல் அறிந்து பாப்பம்மாள் மூத்த மகன் சீனிவாசன்
சம்பவம் குறித்து கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் படுகாயம் அடைந்த தாய் மற்றும் தம்பியை பார்க்க அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை இதனை அறிந்த மணல் மாபியாக்கள் 10க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் புகுந்து மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சைக்காக வந்த பாப்பம்மாள் மற்றும் அவரது மகன்கள் சீனிவாசன் மற்றும் ஜெயக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மணல் கடத்தலை தடுத்த முயன்ற மூதாட்டி மற்றும் அவரது மகன்களை மருத்துவமனை வளாகத்திலேயே தாக்கப்பட்ட சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *