Headlines
தலைப்பு: பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம்…

Read More
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்க முப்பெரும் விழா கோலாகலம்: 666 ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்தல்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில், திண்டுக்கல் டவுன் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா மற்றும் சங்கத் தலைவர் கே. ரெத்தினத்தின் 66-வது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் சலங்கை ஒலி நடனப்பள்ளி மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனத்துடன் விழா இனிதே தொடங்கியது. முனைவர் காதர் பாட்சா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை…

Read More
கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு!

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் லாரிகளில், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான பாரத்தை மட்டுமே (Overloading தவிர்த்து) ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இவ்வாறு சரியான அளவில் பாரம் ஏற்றி வரும்போது, செங்கல் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்…

Read More
விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு

விழிப்புணர்வின் பலன்: மூன்று மாணவிகள் புகார் அளிக்க வழிவகுத்த காவல் அதிகாரிக்கு பாராட்டு.

09 ஜூலை; நெல்லை நியூஸ் திருநெல்வேலியில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் செயல்பாட்டை பாராட்டிய சரக டிஐஜி திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிங்கப்பெண் சிறப்புப் படை மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மூன்று மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த குற்றச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்து காவல்துறையை அணுகியுள்ளனர். இந்த முயற்சிக்கு முக்கிய பங்காற்றிய சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஜெசி மேனகாவை நெல்லை சரக காவல்துறை டிஐஜி திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டினார். மாணவிகள் தங்களுக்கெதிராக நடைபெற்ற…

Read More
கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

09 ஜூலை, நெல்லை நியூஸ் தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தம்; ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகளில் பொறியியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் முதல் உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோளாறின் தன்மை…

Read More
300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு! நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு!நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

கோவை தெற்கு வட்டம், உப்பார வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் சாவியானது புதிய கமிட்டியிடம் நேற்று (ஜூலை 2) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் 1972ஆம் ஆண்டு உத்தரவின்படி, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவே இக்கோவிலை நிர்வகிக்க…

Read More
நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத்…

Read More
பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி : ஜூலை 02,தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று (01-07-2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.பாலசமுத்திரம் குரும்பப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பழனி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முத்துசாமி பாண்டியன் தலைமை தாங்கி, தடுப்பூசி பணியினைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்யா ஆகியோர் அடங்கிய கால்நடை…

Read More
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More
சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி.

உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தினசரி காவல் பணிகளில் நீண்ட…

Read More