தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.
கன்னியாகுமரி, ஏப் 10, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும்…
