Headlines
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்று (05.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு,…

Read More
கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கல்

கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கல்.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி 2026-ல் மீண்டும் தொடர்ந்திட கழகத்தின் இளம் தலைவர், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்ஆசியுடனும், ​கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளரும், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள், ​வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், தலைமைக் கழகம் வாய்ப்பளிக்கும் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக விருப்பமனு வழங்கினார் ​அந்தத் தருணத்தில் வர்த்தகர் அணி…

Read More
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்

சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…

Read More
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மதுரையில் கூடல்அழகர் பெருமாள் கோவில் 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது இத்திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள தெப்பத்தில் இன்று தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . இந்த தெப்ப திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மதுரை டவுன் ரோடு பகுதியில் உள்ள வியாபாரிகள் சார்பில் சிறப்பு பூஜைகளும் ,அன்னதானமும் நடைபெற்றது . தெப்பத் திருவிழாவில் வியாபாரிகள் சார்பில்…

Read More
தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்.

கோவை ஆட்சியர்அலுவலகம் அருகில் உள்ள bsnl அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அச்சு ஊடக உரிமையாளர் சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி, அவர்கள், அவர்களுக்கு, தேவையான சில பத்திரிகையாளர்களை ஆதரித்தும் மற்ற பத்திரிக்கையாளர் அனைவரையும், புறக்கணிப்பதை, கண்டித்தும், இதைக் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கண்டித்தும் அனைத்து தினசரி மாதம் வாரம் வரும் இதழ்களின் பத்திரிகையாளர்களுக்கு, ஒன்றியஅரசு வழங்க அறிவுறுத்தியுள்ள, பஸ் பாஸ் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள். பஸ்…

Read More
மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.

மாவட்ட செயலாளருக்கு நகர செயலாளர் பச்சைக்கொடி.

திமுக பழனி நகர செயலாளர் வேலுமணி பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாருக்கு சென்னை அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். பழனியில் மீண்டும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் ஐ.பி.செந்தில்குமார் போட்டியிட மாட்டார், திண்டுக்கல்லில் போட்டியிடுவார் என்றும் பழனியில் வேலுமணி போட்டியிடுவார் என்று பழனி அரசியலில் உலவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்நிகழ்வு.

Read More
புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா.

புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா.

ஊட்டி பிப்ரவரி நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ் எம் .எல். ஏ அவர்களின் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் (2024 -2025) 27 வது வார்டு தீட்டுக்கல் பகுதியில் நியாய விலை கடை கட்டப்பட்டது. இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 27ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி. ஆர். ஜெயலட்சுமி…

Read More
நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை 'கூகை' ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

கன்னியாகுமரி, பிப் 25 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும்…

Read More
தேர்தல் 2026 இலட்சினை (Icon)அறிமுக விழா

தேர்தல் 2026 இலட்சினை (Icon) அறிமுக விழா

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை 2026ஐ முன்னிட்டு தேர்தல் Icon இருவாச்சி பறவை (hornbil) வடிவமைப்பில் அமைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோவைமாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
பழனி பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பழனி பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி வளாகத்தில் செயல்படும் அறிவுசார் ஆற்றல் மையத்தில் மகளிருக்கான கழிப்பறையில் கதவுகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அங்கு படிக்க வரும் கிராமப்புற மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பழனி நிருபர் நா.ராஜாமணி.

Read More