Headlines
கன்னிவாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 வாகனங்கள் பறிமுதல்: கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை!

கன்னிவாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 5 வாகனங்கள் பறிமுதல்: கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை!

ஆகஸ்ட் : 22 திண்டுக்கல் / ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி அருகே நீர்நிலைகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி (JCB) இயந்திரங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவத்தின் பின்னணி: கன்னிவாடி அடுத்த தெத்துப்பட்டி குளம், மாங்கரைகுளம், சிறுநாயக்கன்பட்டி குளம், வாகைகுளம் உள்ளிட்ட அரசு நீர்நிலைகளில் அனுமதியின்றி வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர்…

Read More
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) பழனி நகர் மற்றும் ஒன்றிய குழுக்கள் சார்பில் பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை கணக்கெடுக்க சொன்ன குழிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் மீதும், இடதுசாரி மாணவர் இயக்கங்களின் போராட்டங்களை ஒடுக்க சுற்றறிக்கை விடுத்த இதற்கு காரணமான தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம்…

Read More
காதல் தகராறில் வாலிபர் தலையில் ஹாலோபிளாக் கல்லால் தாக்குதல்: வாலிபர் கைது, சிறையில் அடைப்பு!

காதல் தகராறில் வாலிபர் தலையில் ஹாலோபிளாக் கல்லால் தாக்குதல்: வாலிபர் கைது, சிறையில் அடைப்பு!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, ஒருதலைக் காதலால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மடத்துக்குளம் அடுத்துள்ள துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனசின்னத்துரை என்பவரின் மகள் சௌமியாவை, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் ரஞ்சித் (19) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அடிக்கடி மதுபோதையில் பெண் வீட்டார் வசிக்கும்…

Read More
பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியக் கோரிக்கைகள் வருமாறு:பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு வரும்…

Read More
மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக்குழுக் கூட்டம் (Anti-Drug Club Meeting) இன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் தலைமை தாங்கி, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விரிவாக உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பி வலியுறுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. நாகராஜன், கல்லூரியின்…

Read More
பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

தமிழக அரசு விவசாய பயன்பாட்டிற்காக குளங்களில் மண் அள்ள அனுமதி வழங்கி வருகிறது. இதற்காக விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் போன்ற ஆதாரங்களுடன் பொதுப்பணித்துறைக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, டிராக்டர்கள் மூலம் இலவசமாக மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனி அருகே உள்ள அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் இந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் சில அதிகாரிகளின் உதவியோடு மண் மாபியாக்கள் சட்டவிரோதமாக மண் கடத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த சில…

Read More
பழனியில் உள்ள சண்முகநதி புனித நதியா அல்லது சாக்கடை நதியா பக்தர்கள் கொந்தளிப்பு..

பழனி அருகே ஆயக்குடியில் உள்ள உள்ள குப்பை கிடங்கில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேரில் ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீரும் தரம் கெட்டுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் பட்டியலின மக்கள் அதிகமாக வாழும் அப்பகுதியில் கவுன்சிலர் சரஸ்வதி வாஞ்சிநாதன் தலைமையில் பலமுறை புகார் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் துர்கா தேவி நேரில் குப்பை கிடங்கை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து குப்பை…

Read More
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில்…

Read More
பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி, ஆக.9: பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பர மேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக ஆவ ணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய ஆயக்குடி யில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கரில்…

Read More
ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்

ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரபல சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில், 18-வது ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. அரசு மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பழனி கல்வி மாவட்ட அலுவலர் பரிமளா, பள்ளி தலைமை மேலாளர் ராணி புளோரன்ஸ் மற்றும் தலைமை ஆசிரியை லில்லி கிரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் முத்தாய்ப்பாக, மாணவ-மாணவிகளின் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கை அதிர வைத்தன! சிறுவர்களின் சுழன்றடிக்கும் சிலம்பாட்டம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. வெறும்…

Read More