Headlines
பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? - அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

பாஜகவின் நிழல் ஆட்சியா தவெக ஆட்சி? – அமைதியின் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள்!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. “புதிய மாற்றம் வரும், தொழில்துறை செழிக்கும்” என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக அரசு தனது செயல்பாடுகளில் வேகம் காட்டாமல் கோட்டை விட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கும் மிக முக்கியமானது புதிய தொழில் முதலீடுகள். ஆனால், தவெக ஆட்சி…

Read More
பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

பழனி, ஜூலை 29: பழனி அருகே வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சினையாட்டைத் திருடிச் சென்று கொன்ற நபரை, ஆட்டின் உரிமையாளர் அவரது தம்பியுடன் சேர்ந்து துரத்திப் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலம்பட்டி அஞ்சல், வேப்பன்வலசு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (36). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 09.00 மணியளவில், வீட்டின்…

Read More
பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!

பழனி கோவில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் மேலும் ஒருவர் கைது!

பழனி, ஜூலை 29: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாகப் பத்திரம் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவில் நில மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில ஆவண மோசடி வழக்கில்…

Read More
கன்னியாகுமரியில் மேலும் 10 இடங்களுக்கு விரிவாக்கம்: AI கண்காணிப்பால் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் காவல்துறை

கன்னியாகுமரியில் மேலும் 10 இடங்களுக்கு விரிவாக்கம்: AI கண்காணிப்பால் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் காவல்துறை.

‘Zero Accident Kumari’ இலக்கை முன்னிறுத்தி KAAVAL AI திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், KAAVAL AI – Automatic Traffic Violation Detection System திட்டம் மேலும் 10 முக்கிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, புதன்கிழமை (29.07.2026) வடசேரியில் நடைபெற்ற…

Read More
குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!

குடிபோதையில் விவசாயியைத் தாக்கிய நபர் கைது.!

மடத்துக்குளம் அருகே குத்தகைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நபரை, குடிபோதையில் தகராறு செய்து தாக்கிய நபரை கணியூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:கணியூர் காவல்நிலைய எல்லையை ஒட்டியுள்ள காரத்தொழுவு முள்ளங்கி வலசு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (55), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (45), என்பவர் விவசாயம் செய்து…

Read More
பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

கொடைக்கானல், பூண்டி : ஜூலை 24 கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் எல்லைக்குட்பட்ட பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அரசுச் சொத்தான இக்குடிநீர் விநியோகக் கட்டமைப்பு சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால், தினமும் பல நூறு லிட்டர் சுத்தமான குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடருமானால், வரும் காலங்களில் பூண்டி பகுதி மக்களுக்குக்…

Read More
பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூண்டியில் செயல்பட்டு வரும் DD320 பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உடனடியாக நிரந்தர மேலாளரை நியமித்து, சங்கத்தின் செயல்பாடுகளை சீரமைக்க வலியுறுத்தி பூண்டி, கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூர், கிளாவரை ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் தெய்வேந்திரன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சுற்றியுள்ள 5 கிராம மக்களின் ஒரே…

Read More
கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!

கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!

பூண்டி, ஜூலை, 17: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் சார்பாகச் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்….

Read More
தலைப்பு: பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம்…

Read More
பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பின்றி, சுகாதாரம் சீர்கெட்டு மூக்கைப் பொத்தும் நிலையில் காணப்படுகின்றன. இதில் பெண்களுக்கான கழிப்பறை ‘திண்டுக்கல் சிறப்புப் பூட்டு’ போட்டுப் பொதுமக்கள் பயன்படுத்தாதவாறு பூட்டி வைக்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கான கழிப்பறையோ குப்பை சேகரிக்கும் கிடங்காக மாறியுள்ளது. தரையெங்கும் மனிதக் கழிவுகள் தேங்கி, நோய்தொற்று ஏற்படும் அபாயம் தோன்றுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசும் இந்த அவல நிலையைக் கண்டு, “இதைக் கட்டிய அதிகாரிகள் இந்தக் கழிப்பறையைப்…

Read More