Headlines
பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

கொடைக்கானல், பூண்டி : ஜூலை 24 கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் எல்லைக்குட்பட்ட பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அரசுச் சொத்தான இக்குடிநீர் விநியோகக் கட்டமைப்பு சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால், தினமும் பல நூறு லிட்டர் சுத்தமான குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடருமானால், வரும் காலங்களில் பூண்டி பகுதி மக்களுக்குக்…

Read More
பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூண்டியில் செயல்பட்டு வரும் DD320 பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உடனடியாக நிரந்தர மேலாளரை நியமித்து, சங்கத்தின் செயல்பாடுகளை சீரமைக்க வலியுறுத்தி பூண்டி, கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூர், கிளாவரை ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் தெய்வேந்திரன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சுற்றியுள்ள 5 கிராம மக்களின் ஒரே…

Read More
கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!

கொடைக்கானல் மேல்மலை பூண்டியில் மது ஒழிப்பு போராட்டம்: காவல்துறை உறுதியளித்ததால் தற்காலிகமாக வாபஸ்!

பூண்டி, ஜூலை, 17: கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் சார்பாகச் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு, சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராகக் கண்டனக் குரல்களை எழுப்பினர். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்….

Read More
தலைப்பு: பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி அருகே அவலம்: புதர்மண்டிக் கிடக்கும் கீரனூர் சுடுகாடு – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி, ஜூலை 17 : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், கீரனூர் பேரூராட்சியில் உள்ள பொது சுடுகாடு முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் மாறியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சுடுகாட்டில் நீண்ட நாட்களாகப் புதர்கள் அகற்றப்படாததால், காடு போல் மண்டிப் போய்க் காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுமட்டுமன்றி, இப்பகுதியைச் சிலர் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருவதால், கடுமையான துர்நாற்றம்…

Read More
பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பின்றி, சுகாதாரம் சீர்கெட்டு மூக்கைப் பொத்தும் நிலையில் காணப்படுகின்றன. இதில் பெண்களுக்கான கழிப்பறை ‘திண்டுக்கல் சிறப்புப் பூட்டு’ போட்டுப் பொதுமக்கள் பயன்படுத்தாதவாறு பூட்டி வைக்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கான கழிப்பறையோ குப்பை சேகரிக்கும் கிடங்காக மாறியுள்ளது. தரையெங்கும் மனிதக் கழிவுகள் தேங்கி, நோய்தொற்று ஏற்படும் அபாயம் தோன்றுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசும் இந்த அவல நிலையைக் கண்டு, “இதைக் கட்டிய அதிகாரிகள் இந்தக் கழிப்பறையைப்…

Read More
கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை; ஆற்றூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் விழா

கர்மவீரர் காமராஜருக்கு மரியாதை; ஆற்றூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறந்தநாள் விழா

மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணகுமார் தலைமையில், ஆற்றூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கர்மவீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது பொதுச்சேவையையும் கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள்,…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது

அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தள பதிவு: பெண் ஒருவர் கைது

கன்னியாகுமரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை; புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் தரக்குறைவான கருத்துகள் பதிவிட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், 36 வயதுடைய பெண் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் அரசாங்கம் வழங்கும் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்காமல், அவற்றை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி லாபம் அடைவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அங்கன்வாடி ஊழியர்களின் கூட்டமைப்பு காவல்துறையில்…

Read More
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ எனப் பரவலாக அறியப்பட்ட புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, 2026 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி தனது 88 ஆவதுவயதில் காலமானார் . வயது முதிர்வு தொடர்பான நோய்கள் காரணமாகமைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்அவர் உயிர் நீத்தார் . தொழில் சிறப்பம்சங்கள்மகத்தான படைப்பு:ஆறு தசாப்தங்கள் நீடித்த தனது இசைப்பயணத்தில் , தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உட்பட 17க்கும் மேற்பட்ட மொழிகளில்ஏறக்குறைய 48,000 பாடல்களை அவர் பதிவு…

Read More
300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு! நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு!நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

கோவை தெற்கு வட்டம், உப்பார வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் சாவியானது புதிய கமிட்டியிடம் நேற்று (ஜூலை 2) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் 1972ஆம் ஆண்டு உத்தரவின்படி, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவே இக்கோவிலை நிர்வகிக்க…

Read More
நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத்…

Read More