பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே உடைந்து வீணாகும் குடிநீர் குழாய்: ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
கொடைக்கானல், பூண்டி : ஜூலை 24 கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் எல்லைக்குட்பட்ட பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கியப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாகத் தண்ணீர் வீணாகச் சாலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அரசுச் சொத்தான இக்குடிநீர் விநியோகக் கட்டமைப்பு சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதால், தினமும் பல நூறு லிட்டர் சுத்தமான குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடருமானால், வரும் காலங்களில் பூண்டி பகுதி மக்களுக்குக்…
