கன்னியாகுமரியில் ஆட்டோக்களில் அதிமுக தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.
நாகர்கோவில், சன 29: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஃப்ளெக்ஸ் ஒட்டும் இயக்கம் தொடங்கப்பட்டது. முக்கிய திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அவற்றில்:…
