பொறுப்புணர்வின் உதாரணம்; சுற்றுலா பயணியிடம் செல்போன் ஒப்படைப்பு.
கன்னியாகுமரி, மே : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற சுற்றுலா பயணி தனது செல்போனை தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருந்த அந்த செல்போன் காணாமல் போனதால் அவர் கவலையடைந்திருந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணையின் மூலம் செல்போன் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர் பிரின்ஸிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. சுற்றுலா மையமாக விளங்கும் கன்னியாகுமரியில்…
